பல்லவி
1ப்ரொத்3து3 பொய்யெனு ஸ்ரீ ராமுனி
பூனி ப4ஜிம்பவே மனஸா
அனுபல்லவி
நித்3து3ர சேத கொன்னாள்ளு விஷய
பு3த்3து4ல சேத கொன்னாள்ளு ஓ மனஸா (ப்ரொ)
சரணம்
சரணம் 1
ப்ரொத்3து3ன லேசி 2த்ரி-தாபமுலனு நருல
பொக3டி3 பொக3டி3 கொன்னாள்ளு 3பட்டி-
யெத்3து3 ரீதி கன்ன 4தாவுல பு4ஜியிஞ்சி
ஏமி தெலியக கொன்னாள்ளு
முத்3து3க3 தோசு ப4வ ஸாக3ரமுன
முனிகி3 தேலுசு கொன்னாள்ளு
பத்3து3 மாலின பாமர ஜனுலதோ வெர்ரி
பலுகுலாடு3சு கொன்னாள்ளு ஓ மனஸா (ப்ரொ)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
ப்ரொத்3து3/ பொய்யெனு/ ஸ்ரீ ராமுனி/
பொழுது/ போனது/ ஸ்ரீ ராமனை/
பூனி/ ப4ஜிம்பவே/ மனஸா/
விரதம் பூண்டு/ தொழுவாய்/ மனமே/
அனுபல்லவி
நித்3து3ர சேத/ கொன்னாள்ளு/ விஷய/
உறக்கத்துடன்/ சில நாள்/ விடய/
பு3த்3து4ல சேத/ கொன்னாள்ளு/ ஓ மனஸா/ (ப்ரொ)
எண்ணங்களுடன்/ சில நாள்/ ஓ மனமே/ பொழுது...
சரணம்
சரணம் 1
ப்ரொத்3து3ன/ லேசி/ த்ரி-தாபமுலனு/ நருல/
காலை/ எழுந்து/ மூவாசையினால்/ மனிதர்களை/
பொக3டி3/ பொக3டி3/ கொன்னாள்ளு/ பட்டி/
புகழ்ந்து/ புகழ்ந்து/ சில நாள்/ பட்டி/
எத்3து3/ ரீதி/ கன்ன/ தாவுல/ பு4ஜியிஞ்சி/
மாடு/ போன்று/ கண்ட/ இடங்களில்/ உண்டு/
ஏமி/ தெலியக/ கொன்னாள்ளு/
ஏதும்/ அறியாது/ சில நாள்/
முத்3து3க3/ தோசு/ ப4வ/ ஸாக3ரமுன/
அழகாக/ தோன்றும்/ பிறவி/ கடலினில்/
முனிகி3/ தேலுசு/ கொன்னாள்ளு/
மூழ்கி/ மிதந்து/ சில நாள்/
பத்3து3/ மாலின/ பாமர/ ஜனுலதோ/ வெர்ரி/
முறை/ தவறிய/ தீய/ மக்களுடன்/ மூடத்தனமான/
பலுகுலு-ஆடு3சு/ கொன்னாள்ளு/ ஓ மனஸா/ (ப்ரொ)
உரைகளாடி/ சில நாள்/ ஓ மனமே/ பொழுது...
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
4 - தாவுல - தாவுன.
Top
மேற்கோள்கள்
விளக்கம்
1 - ப்ரொத்3து3 பொய்யெனு - பல்லவியில் இச்சொல்லுக்கு 'காலம் கடந்துவிட்டது' என்ற பொருள் படும். அனுபல்லவி மற்றும் சரணங்களிலுள்ள 'கொன்னாள்ளு' என்ற சொல்லுடன் இணைத்துப் பொருள் கொள்கையில், 'காலம் கடத்திவிட்டாய்' என்றும் பொருள்படும்.
2 - த்ரி-தாபமுலனு - மூவாசை - மூன்று துயரங்கள் (ஆத்யாத்மிக-ஆதிபௌதிக-ஆதிதைவீக) என்றும் கொள்ளலாம்
Top
3 - பட்டி எத்3து3 - புத்தகங்களில், இதற்கு, 'திரியும் காளை' என்று பொருள் கொள்ளப்பட்டுள்ளது. 'எத்3து3' என்ற சொல், 'காளை' எனப் பொருள்படும். ஆனால், 'பட்டி' என்ற தெலுங்கு சொல்லுக்கு 'திரிதல்' என்ற பொருளில்லை. தியாகராஜர், தமது 'எடுல ப்3ரோதுவோ' என்ற சக்ரவாக கீர்த்தனையிலும், இதே சொற்களைப் பயன்படுத்துகின்றார். அந்த கீர்த்தனையிலும், இவ்விடத்திலும், 'திரியும் காளை' என்ற பொருள் பொருந்தும். தமிழ்ச் சொல்லாகிய 'பட்டி' அத்தகைய பொருள் தரும். எனவே, தியாகராஜர், 'பட்டி' என்ற தமிழ்ச்சொல்லினைப் பயன்படுத்தியுள்ளார் என்று நான் கருதுகின்றேன்.
தென்னிந்தியாவில், சிவன் கோவிலுக்கு, காளைக் கன்றினை மக்கள் அளிப்பது வழக்கம். அக்காளை, 'கோவில் காளை' எனப்படும். அதன்மீது முத்திரையொன்றும் குத்தப்படும். அக்காளை, தன்னிஷ்டப்படித் திரியும். அது, எங்கு உணவு கிடைத்தாலும் உண்ணும். அத்தகைய பொருளும் இவ்விடம் பொருந்தும். ஆனால், 'பட்டி' என்ற சொல்லினால் 'கோவில் காளை' என்ற பொருள் கொள்ள இயலாது.
Top
5 - ஸோ1கார்ணவ க3துடை3 (ஸோ1க அர்ணவ க3துடை3) - இச்சொல்லினை, 'ஸோ1க அர்ண அவக3துடை3' என்றும் பிரிக்கலாம். ஆனால், 'அவக3துடை3' என்ற சொல் நேர் மாறான பொருள் தருதலால், அது பொருந்தாது.
6 - முதி3 மதி3 தப்பின வ்ரு2த்3த4 தனமுசே - 'முதி3' மற்றும், அடுத்து வரும், 'வ்ரு2த்3த4 தனமு' என்ற இரு சொற்களுக்கும், 'முதுமை' என்றுதான் பொருள். எனவே, 'முதி3' என்ற சொல்லுக்கு 'முடிவில்' என்ற பொருள் கொள்ளப்பட்டது.
Top
பொழுது போனது - காலம் கடந்தது
விடயம் - புலன் நுகர்ச்சி
மூவாசை - மனைவி, மக்கள், செல்வம்
எதிர்ப் பச்சை - மற்றவரின் செழிப்பு
பற்று, பேராசைகள் - காமம் முதலிய உட்பகைவர் அறுவர்.
இராசதம் - முக்குணங்களிலொன்று
இராமனின் தத்துவம் - இராமன் பரம்பொருளென
Top